Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, April 8, 2008

கண்ணார கண்டேன் என் கண்ணனை

காணாமல் போயிருந்த கிருஷ்ணன் படம் கிடச்சிருச்சு. போன பதிவுல 'கிடைத்தால் வலையேற்றுவேன்' என்று சொன்னேன் இல்லையா அந்த கிருஷ்ணரத்தாங்க சொல்றேன். மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரியெல்லாம் இல்லே. ஒரு ஸ்கூல் குழந்தை போட்ட படம் மாதிரிதான் இருக்குன்னாலும் அதுக்கு பின்னாடி இருக்கிற செண்டிமெண்ட் பாருங்க அதுதான் அடிச்சுக்குது. என்னோட முதல் ஆயில் பெயிண்டிங் ஆச்சே!

ராஜீவ் காந்தி நினைவகத்தில அவரு நர்சரில போட்ட ட்ராயிங்கெல்லாம் எல்லாரும் பார்க்கிறதுக்காக வைச்சிருக்காங்கன்னா காரணம் செண்டிமெண்ட்தாங்க. அதனால நம்ம வீட்டு குழந்தைங்க போட்ட படத்தையெல்லாம் தூக்கி போட்டுடாதீங்க. எந்த புத்துல எந்த பாம்பு
இருக்குமோ யாரு கண்டா! இன்னொரு கலாமோ ஆனந்தோ அவங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கலாம். அவங்களே தீர்மானம் பண்ணி தூக்கி போடற வரைக்கும் பாதுகாப்பா வச்சிருந்து குடுத்துடுங்க.நம்ம கடமை முடிஞ்சுது.

எப்படி கெடச்சதுன்னு சொல்லலையே. ஒரு மாசமா ஊரு மாத்திப்போற காரணத்துல எல்லாத்தையும் இழுத்துப்போட்டு பெரட்டி,மாத்தி பாக்கிங் பண்ணும் போது “கண்ணாரக் கண்டே உடுப்பி கிருஷ்ணனா ” KV. நாரயணசாமியெ பாட்டு பாடச் சொல்ற ஒரு சந்தோஷம்.

ஆயில் பேப்பர் ரொம்ப பழசா போயி இங்கேயும் அங்கேயுமா டேமேஜ். ஓரங்களெல்லாம் நைந்து பொடியாகி விழுகிற ஒரு ரிஸ்க். ஜாக்கிரதையா ஸெல்லோ டேப் ஒட்டி ஸ்கேன் பண்ணி பத்திரப் படுத்தினப்புறம் தான் திரும்பவும் பாக்கிங் வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

இப்போ மைசூர் வாசி. எவ்வளவு நாளைக்குன்னு தெரியாது. இன்னும் ப்ராட் பேண்ட் வரவில்லை. கை ஒடிஞ்ச மாதிரிதான் இருக்கு.

பதிவுகள் எதையும் படிக்க முடிவதில்லை. 38.6 kbps வேகத்துல என்னன்னு பிரிக்கிறது படிக்கிறது. ஒரு பதிவு திறப்பதற்கு 15 நிமிஷமாகுது :(

மைசூர் வந்த கையோட இன்னொரு ஸர்ப்ரைஸ். நமது உறவினர் வீடுகளுக்கெல்லாம் ஒரு மரியாதை நிமித்தம் ஹலோ சொல்ல போயிருந்தோம். அப்ப ஒரு வீட்டுலே நான் எந்த காலத்திலோ அவங்களுக்கு வரைஞ்சு குடுத்திருந்த ஒரு சிறுத்தை படத்தை எடுத்து காண்பித்தார்கள். அட! இப்படி ஒண்ணு வரஞ்சிருந்தேனா ? எப்போ ? அப்படீன்னு முடியை பிச்சுக்கிற மாதிரி ஆயிடுச்சு. சுமார் இருபது வருஷத்துக்கு முந்தி அவங்க வீட்டுல ஒரு அரைநாள் தங்கும்படி ஆச்சு. அப்போ வரஞ்சுதாம். படம் கிருஷ்ணர் அளவுக்கு நைந்து
போகாமல் ஓரளவு நல்ல கண்டிஷன்-ல இருந்ததற்கு அவங்களுக்கு நன்றி சொன்னேன்.


ஆஹா நம்ம வலைப்பூவுக்கு இன்னொரு படம் கிடைச்சதுங்கற சந்தோஷத்துல அவங்க கிட்ட கேட்டு ஸ்கேன் பண்ணி வச்சு கிட்டேன்.

இதுவும் ஆயில் பெயிண்டிங்தான். ஆயில் பேப்பர்-ல போட்டது 30 cm x 20 cm அளவு.

No comments: