Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Wednesday, November 12, 2008

குருந்தமலைக் குமரன் காட்டிய காட்சி

முதன் முதலா வாட்டர் கலர் பயன்படுத்தும் போது பிரஷ் ஓட்டம் கோட்டு மேல் ஒழுங்காக வராமல் பிசிறு தட்டும். அந்த குறையை போக்குவதற்கு அந்த கோட்டை திரும்பவும் கறுப்பு பேனாவால் திருத்திவிடுவேன். அதுவும் படம் நன்றாகக் காய்ந்த பிறகு. இல்லாவிட்டால் அது ஈரத்தில் பக்கவாட்டில் படரும். அதனால அதுதான் ஃபினிஷிங் டச்.

பிற்காலத்துல Ink & water color டெக்னிக்-னு ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இது பெரும்பாலும் ஸ்பாட் பெயிண்டிங்கில பயன்படுமாம். முதல்ல தண்ணியிலே கரையாத மையால் படத்தை வரைந்து கொண்டு பிறகு அங்கங்கே வாட்டர்-கலரை வைத்து ஒரு வாஷ் கொடுத்து விடவேண்டும்.

இது நான் ஆரம்பத்துல சொன்னதுக்கு நேர் எதிர். இங்கே முதல்ல இங்க் அப்புறம்தான் வர்ணம். வாட்டர்ஃப்ரூஃப் இங்க் ஆனதுனால தண்ணீர் படும்போது அழியாது,பிசிறடிக்காது. இந்த முறையை பயன்படுத்தி Terry Banderas என்பவர் அமர்களமா போட்டுத் தள்ளறார்.

நாமும் அப்படி ஒரு படத்தை போட்டு பார்க்கலாம் அப்படின்னு வரஞ்சதுதான் இந்த குருந்தமலை(காரமடை அருகே)மேலே உள்ள பாலதண்டாயுத பாணி கோவிலுக்கு சற்று கீழ் மட்டத்தில் இருக்கும் இந்த கங்காதீஸ்வரன் கோயில்.



தண்ணீர்ல கரையாத இங்க் இப்போது பல water-proof ஜெல் பேனாக்களாக வருகிறது. முதலில் அப்படிபட்ட பேனாவில் வரைந்து கொண்டு பின்னர் வர்ணம் கொடுத்தேன். இளம் பச்சை வர்ண ஹாண்ட்-மேட் பேப்பரில் வரையப்பட்டது. அதனால்தான் அந்த சுவற்றின் வெள்ளை மிக எடுப்பாக தெரிகிறது.

இது நேரில் அமர்ந்து வரைந்ததல்ல, புகைப்படத்தின் துணை கொண்டு வரையப்பட்டது. ஹாண்ட்-மேட் வரைதாளானதால் கலர் வாஷ் செய்யும் போது உடனே நீரை உறிஞ்சி வர்ணங்கள் சீராக பரவுவதை தடுத்தது. இந்த பிரச்சனையை wet-in-wet முறையில்-அதாவது முன்பே ஈரப்படுத்தி பின்னர் வர்ணத்தை கொடுப்பது-ஓரளவு சமாளித்தேன்.

ஆனால் ஹாண்ட்-மேட் தாளின் சுர சுரப்புத் தன்மை பாறைகளின் கரடு முரடான தன்மைக்கு உதவி செய்தது என்று நினைக்கிறேன்.

டெர்ரியின் வர்ணக்கலவைகளை பார்க்கும் போது அவர் மிக உயர்ந்த தரமுள்ள வர்ணங்களையும் வரைதாளையும் உபயோகிப்பவர் போல இருக்கு. ஹூம் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

அது என்னமோ தெரியவில்லை. e-snip-ல் வலையேற்றிய அன்றைக்கே இந்த படத்தை முதல் பக்கத்தில் (Home-page) போட்டு பெருமை படுத்தி விட்டார்கள். எல்லாம் முருகன் செயல் !